திங்கள், 3 ஜனவரி, 2011

த்ரிஷா போனா திவ்யா-(A naive attempt by a first time blogger)

விலைவாசி உயர்வு,2ஜி, வெங்காயம்,தக்காளி விலை எதை பற்றியும் கவலைபடாமல் அன்று நிம்மதியாக தூங்கி கொண்டிருந்தேன். திடீரென்று மெசேஜ் ஒலி என் செல்போனில். தூக்க கலக்கத்தில் மெசேஜை படித்துவிட்டு தூக்கத்தை தொடர்ந்தேன். 4 மணி நேரம் கழித்து ஒரு கால் பண்ணலாம் என போனை எடுத்த பொழுது,பேலன்ஸைக் காணோம், "அடபாவிகளா! கஷ்டப்பட்டு சேர்த்து வச்ச 100 ரூ பேலன்சை காணோம். பேலன்ஸ் இப்போ 0.00.கஷ்(ஸ்)டமர் கேர்க்கு கூப்பிட்டு விசாரிக்கலம் என்று அழைத்தேன். அப்பொழுது நிறைய க்ராஸ் டாக் வந்தது. அதில் சில உங்கள் பார்வைக்கு.

வட்ட செயலாளர் வண்டு முருகன்: ஹலோ நான் வட்ட செயலாளர் வண்டு முருகன் பேசறேன்

பா.ம.க நிறுவனர் ராமதாஸ் : தமிழகத்தில் பா.ம.க துணை இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது, தமிழகத்தின் அடுத்த சக்தி பா.ம.க‌

வட்ட செயலாளர் வண்டு முருகன்: இந்த ஊர் இன்னமுமா உங்களை நம்பிகிட்டு இருக்கு, அந்த வெங்காயமெல்லாம் இருக்கட்டும், முதல்ல நான் சொல்றத கெளுங்க‌

ராமதாஸ்: நான் யாரை கை காட்டுகிறேனோ அவர்தான் அடுத்த முதல்வர்


வண்டு முருகன்: அந்த கைய என் பக்கம் காண்பிக்கிறது, சரி வேணாம் உங்க பக்கம் காண்பிக்கிறது, அடச்சே உங்க கூட பேசி நான் சொல்ல வந்ததை மறக்க போறேன், முதல்ல நான் சொல்றத கேளுங்க‌


ராமதாஸ்: ஜப்பானில் ஜாக்கி சான் கூப்டாக, அண்டார்டிக்காவில் அமெரிக்க அதிபர் கூப்டாக ஆட்சி அமைக்க, ஆனால் தமிழ் மக்களின் நலனுக்காக போராடும் ஒரே கட்சி பா.ம.க‌

வண்டு முருகன்: யோவ் உனக்கு இவளோதான் மரியாதை, நான் சொல்ல வர்றத கேளு

ராமதாஸ்: நாங்கள் தி.மு.க வுடன் கூட்டணியா, அல்லது அ.தி.மு.க வுடன் கூட்டணியா என்று நீங்கள் கேட்கலாம்

வண்டு முருகன்: நான் கேட்கவே இல்லையேயா

ராமதாஸ் : நீங்கள் கேட்கலாம், எங்களை விட சிறந்த கட்சி ஏதேனும் இருந்தால் எங்கள் கட்சியை கலைத்துவிட்டு அவர்களுடன் சேர தயார். இப்பொழுது புரிந்திருக்கும் நாங்கள் யாருடன் கூட்டணி என்று..

வண்டு முருகன்: விட்டா நீ பேசிக்கிட்டே இருப்ப,நான் சொல்றத கேளு, காமெடி பண்றது என் வேலை, அரசியல் பண்றது உன் வேலை, கொஞ்ச நாளா நீ அதிகமா காமெடி பண்றத பார்த்து சன் பிக்சர்ஸ் ல இருந்து கிளவுட் நைன் வரைக்கும் படத்துல காமெடி பண்றதுக்கு உன்ன புக் பண்றதா கேள்விப்பட்டேன், மரியாதையா என் பொழப்ப பார்க்க விடு...

ராமதாஸ் : 2016 ல் நாங்கள் ஆட்சியை பிடிப்பது உறுதி

வண்டு முருகன்: ரைட் டா, ஒரு முடிவோட தான்டா இருக்கீங்க, வரேன், நெக்ஸ்ட் டைம் மீட் பண்றேன்.

கால் முடிகிறது, ஆனால் அதற்குள் இன்னொரு கால் க்ராஸ் ஆகிறது.

ரிக்கி பாண்டிங் : ஐயோ பரமா! அவிங்கள போடனும் பரமா, எனக்கு சாவு பயத்தை காட்டிடாங்க பரமா

பரமன் : பொறுடா ரிக்கி!!

ரிக்கி பாண்டிங் : ஐயோ பரமா! இங்கிலாந்து கால்ல என்ன விழவச்சிடாங்க பரமா! அவிங்க டீமையே போடனும் பரமா!

பரமன்: சொன்னா கேளுடா, அதெல்லாம் இப்பொ முடியாதுடா

ரிக்கி பாண்டிங்: ஐயோ பரமா! முடியாதுடா, அவிங்கள போடனும்

பரமன் : ஒரே ஒரு வழி தான் இருக்கு, வேர்ல்டு கப் வருது, அதுல நெதர்லாந்து டீம் ஆடுது, இப்பொ இருக்கற இங்கிலாந்து டீம் பரம்பரைக்கும், நெதர்லாந்து டீம் பரம்பரைக்கும் ஒரு நல்ல தொடர்பு இருந்த‌தா நம்ம சுப்பிரமணிய சுவாமியே சொல்லி இருக்கார், அதனால அவிங்க கூட ஒரு 15 மேட்ச் போட்டு மூச்சு திணற திணற அவிங்கள அடிக்கிறோம், நம்ம வெறியை தீத்துக்கறோம்!

ரிக்கி பாண்டிங்: ஐயோ பரமா!! அவிங்கள போட....(குரல் மங்குகிறது, பேக்கிரவுண்டில் பாட்டு சத்தம் அதிகரிக்கிறது)
வானம் தொட்டு போனா மானமுள்ள சாமி, தேம்புதையா பாவம் தேவர்களின் பூமி!!!

கால் முடிகிறது,அடுத்த க்ராஸ்டாக் கலைஞர் வீட்டுக்கு போகிறது

கலைஞரின் உதவியாளர் : சார் பத்திரிக்கைகாரங்க வந்திருகாங்க, அவங்களுக்கு ஒரு உண்மை தெரிஞ்சே ஆகனுமாம்,
அந்த 1.76 லட்சம் கோடி எங்கனு கேட்கிறாங்க?

கலைஞர் : அவங்கள உள்ள வரவிடாத, போன்லயே உனக்கு பதில் சொல்றேன், அத அவங்க கிட்ட சொல்லிடு,
(சற்று யோசித்துவிட்டு) "15 ரூ மதிப்புள்ள அரிசியை கழக அரசு 1 ரூ க்கு தருகிறது, 1000 மதிப்புள்ள இலவச தொலைக்காட்சியை இலவசமாக தருகிறது, குறைந்த விலையில் சரக்கு விற்பனை செய்கிறது, அதே போல் 2ஜி அலைகற்றையை மக்களின் நலன் கருதி குறைந்த விலைக்கு நல்ல நிறுவனங்களிடம் கொடுத்திருக்கிறது" அப்படினு சொல்லிடு

கலைஞரின் உதவியாளர் : சரிங்க சார்,( சிறிது நேரம் கழித்து லைனில் வருகிறார்) சார் சொன்னேன், ஒத்துக்க மாட்டேங்குறாங்க, அதெல்லாம் மக்கள் பணம் தான், அவங்களுக்கெ திருப்பி கொடுத்து ஏமாத்திறீங்களாம், அந்த 1.76 லட்சம் கோடி எங்கனு கேட்கிறாங்க?

கலைஞர் :(சற்று யோசித்துவிட்டு) 2009 ல் கோவிந்தா அறிக்கையின் படி இந்த 1.76 லட்சம் கோடி என்பது ஒரு மூலதனம் தான், இதைப்போட்டு இன்னும் நான்கு ஆண்டுகளில் 40 லட்சம் கோடி வருவாய் வரும்"னு சொல்லு

கலைஞரின் உதவியாளர் : யாருக்குனு அவங்க கேட்டா என்ன சொல்லனும்?உங்களுக்கா அல்லது உங்க குடும்பத்திற்கா?

கலைஞர் : அடேய், உனக்கும் வாய் நீளம் ஆயிடுச்சு, அது மத்திய மற்றும் மாநில அரசுக்குனு சொல்லு,

கலைஞரின் உதவியாளர் :சரிங்க சார்,( சிறிது நேரம் கழித்து லைனில் வருகிறார்)சார் சொன்னேன், இதையும் ஒத்துக்க மாட்டேங்குறாங்க, அந்த 1.76 லட்சம் கோடி எங்கனு கேட்கிறாங்க?

கலைஞர் :(சற்று யோசித்துவிட்டு)" என் உடலும் உயிரும் துடிப்பது தமிழுக்கே! நீங்கள் என்னை கடலில் தூக்கிபோட்டாலும் நான் கட்டுமரமாகத்தான் மிதப்பேன், நாணயத்துக்கு 2 பக்கம், தலை இல்லாமல் பூ இல்லை, பூ இல்லாமல் தலை இல்லை, அதே போல் நாணயத்துக்கு மறுபெயர் இந்த கழக அரசு" அப்படினு சொல்லு

கலைஞரின் உதவியாளர் : சரிங்க சார்,( சிறிது நேரம் கழித்து லைனில் வருகிறார்)சார் சொன்னேன்.

கலைஞர்:(ஆர்வமுடன்) என்னுடைய பதிலை கேட்டு வாயடைச்சு போயிடாங்களா எல்லாரும்?

கலைஞரின் உதவியாளர் :காறி துப்பாத குறை, இனிமேல் கேள்வியே கேட்க வரமாட்டோம்னு சொல்லிட்டாங்க, அதுல ஒருத்தன் தற்கொலைக்கு முயற்சி பண்ணிருக்கான் இந்த பதில் கேட்டு ..

கலைஞர்: பார்த்தாயடா என் ராஜ தந்திரத்தை!!!!

கால் முடிகிறது.ஒருவழியாக கால் க‌ஸ்டமர்கேர்க்கு போகிறது,(கதை மறந்து போனவர்கள் முதல் பத்தியை படிக்கவும்)

க‌ஸ்டமர்கேர் அதிகாரி : வணக்கம், உங்களுக்கு நான் எப்படி உதவலாம்?

நான்: யோவ், தூங்கற‌துக்கு முன்னாடி 100 ரூ பேலன்ஸ் இருந்தது, தூங்கி எழுந்தா 100 ரூ காணோம், என்ன ஆச்சு?

க‌ஸ்டமர்கேர் அதிகாரி : ஒரு நிமிஷம் சார். (சில நிமிடங்கள் கழித்து வருகிறார்) சார், உங்களுக்கு ஒரு புஷ் மெசேஜ் வந்திருக்கு கொஞ்ச நேரதுக்கு முன்னாடி, அதுல ஓகே ப்ரெஸ் பண்ணி நமீதா பேக்குக்கு நீங்க சப்ஸ்கிரைப் பண்ணிருக்கீங்க‌

நான்: என்னது நான் நமீதா பேக்குக்கு சப்ஸ்கிரைப் பண்ணிருக்கேனா? சார் நான் நல்ல குடும்பத்துல பொறந்தவன் தப்பா பேசாதீங்க‌

க‌ஸ்டமர்கேர் அதிகாரி : சார் அது பேக் p a c k,இனிமேல் நீங்க 1 மாசத்துக்கு நமீதா வால்பேப்பர் படத்தை ப்ரீயா டவுன்லோடு பண்ணலாம்,

நான்: நாசமா போக, தூக்க கலக்கத்துல 100 ரூ ஆட்டய போட்டிங்களா, அத விடுங்க, கால் பண்ணும் போது நிற‌ய க்ராஸ் டாக் வருதே, ஏன்?

க‌ஸ்டமர்கேர் அதிகாரி : சார் 2ஜி ஸ்பெக்ட்ரமை குறைஞ்ச விலைக்கு வாங்கினதால அப்படி தான் இருக்கும், அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க‌

நான்: விளங்கும் டா!

க‌ஸ்டமர்கேர் அதிகாரி :சார் , உங்களுக்கு STD,ISD ல இருந்து கால் க்ராஸ் ஆகிருக்கு, அதனால உங்களுக்கு அதற்க்கான கட்டணம் 48 ரூ, இப்போ உங்க பேலன்ஸ் ‍‍‍-48, உடனடியா நீங்க ரீசார்ஜ் பண்ணாதான் நான் உங்க கூட பேசுவேன், பை சார்

நான்: ஹலோ, ஹலோ, அடப்பாவி வச்சுட்டான்,டீ குடிக்க 5 ரூ மட்டும் தான் டா நான் வச்சிருக்கேன், எங்க டா அவளோ ரூபாக்கு போவேன்

அப்போது ரோட்டோரத்தில் ஒரு குரல் கேட்கிறது

சார் டொகொமோ சிம் , 5 ரூ தான், 50 ரூ டாக்டைம், லைப்டைம் வேலிடிடி, 200 மெசேஜ் தினமும் ப்ரீ,ப்ரூப் ,1 போட்டோ மட்டும் கொடுங்க சார்,

நான் என் 5 ரூ யை பார்த்து சிரித்தேன், த்ரிசா போனா திவ்யா,ஏர்டெல் போனா டொகோமோ!!!!

பின்குறிப்பு: மேலே உள்ள உரையாடலில் கலைஞர் பகுதியை இன்று ஜெயா டி.வி. செய்தியில் ஒளிபரப்ப போவதாக தகவல்.




22 கருத்துகள்:

  1. super machi. sirichu sirichu vayiru than valikuthu. but naatu nelamaya nenacha bayamavum pavamavum iruku.

    பதிலளிநீக்கு
  2. verrrithanam na!!!!!!!!!!!only!!!!!!great thinking and linking all the current affairs na.....really enjoyed a lot...siva=siva

    பதிலளிநீக்கு
  3. @jp. ne naatu nalan ah pathi lam yosika aarambichitia.... poi school ku po da first....

    பதிலளிநீக்கு
  4. super da... sila unmaikala padikiravanga rasikum padi comedy kalanthu solliruka da... really nice...

    பதிலளிநீக்கு
  5. @all thanks for your comments and suggestions, will improve on it,keep reading.........

    பதிலளிநீக்கு
  6. super மச்சி.... blog உலகிற்குள் வருக....!!!
    சென்னை, கோவை ok...,, திருநெல்வேலி-காரவுகல காணோமேனு இருந்தோம்....
    வந்துட்ட... கலக்கு டா.....!!!

    பதிலளிநீக்கு
  7. mapla sema da... super ah irukku... innum ethir paarkuren... apadiye adutha thadavai thirunelveli thamizhla post pannu da

    பதிலளிநீக்கு
  8. kalaketeenga GURU ... un cross talks eppa legal aagapogudhunu parkalaam :);):p

    பதிலளிநீக்கு
  9. @krish elay thanks la,
    @vishnu thank u, also,already CBI ennoda phone ah ottu ketkuratha enaku oru doubt ;-)

    பதிலளிநீக்கு
  10. Super da machi...Kalakittata da coffee... Antha namitha "p a c k" ku enna number nu parthu solra...

    பதிலளிநீக்கு
  11. @shan thanks da,that was a real incident (accident) happened to me da, 100 rupees gaali, airtel la irunthu naan veliya vara ithuvum oru kaaranam aaiduchu

    பதிலளிநீக்கு
  12. i yoo.... i yoo yooo...
    ithagandi antha payapullaka padijathuga.. apdiyum thiruntha maataan ga... unna taan poda nu solli podavula podu vaanuka...

    Any how welcome machi -
    Thanks for a Wonderful Laughter moments....

    பதிலளிநீக்கு
  13. sema..sema...sema.....That kazhaignar conversation is the ultimate comedy...superb na..:-)

    பதிலளிநீக்கு